ராகுலிடம் அமித்ஷா கேட்ட 5 கேள்விகள் ! பதில் சொல்வாரா ராகுல் ?

0
287

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட்ட நிலையில் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் ராகுல் காந்தி களமிறங்கியுள்ளார். நேற்று அத்தொகுதியில் பா.ஜ.கவுக்கு பிரச்சாரம் செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராகுல் காந்திக்கு ஐந்து கேள்விகளை எழுப்பியுள்ளார்.

பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அமித்ஷா, “ராகுல்காந்தி இடம் நான் பகிரங்கமாக 5 கேள்விகளை கேட்கிறேன்;

  1. ‘முத்தலாக்’ முறையை பிரதமர் மோடி ஒழித்துக் கட்டினார். அது நல்லதா? கெட்டதா? நீங்கள் ‘முத்தலாக்’கை திரும்ப கொண்டுவர விரும்புகிறீர்களா? இல்லையா?
  2. முஸ்லிம் தனிநபர் சட்டத்துக்கு பதிலாக, பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டுமா? கூடாதா?
  3. பிரதமர் மோடி நடத்திய துல்லிய தாக்குதல் நல்லதா? கெட்டதா? துல்லிய தாக்குதல் பற்றி கேள்வி எழுப்பிய ராகுல்காந்தி, அதை ஆதரிக்கிறாரா? எதிர்க்கிறாரா?
  4. அயோத்தி ராமர் கோவிலுக்கு நீங்கள் ஏன் செல்லவில்லை?
  5. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவை நீக்கியதை ராகுல்காந்தி ஆதரிக்கிறாரா? எதிர்க்கிறாரா?

இந்த 5 கேள்விகளுக்கும் பதில் அளித்துவிட்டுத்தான், ரேபரேலி மக்களிடம் ராகுல்காந்தி வாக்கு கேட்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார். பாரதிய ஜனதாவின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வரும் ராகுல் காந்தி இதற்கும் உரிய பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here