திருச்செந்தூர் கோவில் கலச நவதானியம் 12 ஆண்டுகளுக்கு பின் அதிசயம் பக்தர்கள் பரவசம்!

0
657

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இக்கோயில் கோபுரத்திலிருந்த கலசத்தில் வைக்கப்பட்டிருந்த வரகு தானியம் 15 ஆண்டுகளுக்கு பிறகும் அதன் தன்மை மாறாமல் இருந்தது பக்தர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு கோயிலிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2009ம் ஆண்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து 2021ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்போது கொரோனா தொற்று காலகட்டம் என்பதால் குடமுழுக்கு நடைபெறவில்லை. இதனையடுத்து இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இன்று கோயில் கோபுரங்களில் உள்ள கலசங்களை மாற்றும் பணிகள் நடைபெற்ற நிலையில், 137 உயரத்திலிருந்த கலசத்திலிருந்து வரகு தானியம் எடுக்கப்பட்டிருக்கிறது. சுமார் 12 ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்த வரகு அப்படியே இருப்பதாக பணியாளர்கள் கூறியுள்ளனர். இதை கண்டு பக்தர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here